Friday 6 May 2011

சிற்பமாய் உன்னுருவம் ..



நீ சொல்லாத வார்த்தைகள்
சொன்ன அர்த்தங்கள் அதிகம்
நீ சொல்லித் தீர்த்தவை
என் நெஞ்சிலே தஞ்சம் .


உன்னை மறக்க நினைத்தால்
என்னை வெறுக்குது நெஞ்சம்
உன்னை வெறுக்க முனைந்தால்
முள்ளாய்க் குத்துது மஞ்சம்.

அற்பமாய் எனை நினைத்து
நீ கொட்டிய வார்த்தைகள்
என் இதயத்தில் உளியாகி
சிற்பமாய் உன்னுருவம் .

No comments:

Post a Comment