அன்பினால் அரவணைத்து
உன்னைக் கண்போல் காத்திருந்தேன்
என்னவன் நீயென்று
உன் உயிருடன் கலந்திருந்தேன்
ஆசையால் வசப்பட்டு
அந்நியனாய்ப் போய்விட்டாய்
பித்துப் பிடித்துப் போய்
பின் முதுகில் குத்தி விட்டாய்.
கண்களுக்குள் கைவிட்டு
கரு விழியைக் கொய்து விட்டாய்
நெஞ்சுக்குள் வெடி வைத்து
வஞ்சகம் செய்து விட்டாய்.
சமுத்திரமாய் நானிருக்க
சாக்கடைக்குள் ஏன் விழுந்தாய்?
சதியென்று நீ அறிந்தும்
மதி கெட்டு ஏன் போனாய்.?
No comments:
Post a Comment